Samaiyalarai

February 1, 2011

செட்டி நாடு குருமா| cetti nadu kuruma

செட்டி நாடு குருமா!


தேவையானவை:

    1. கத்தரிக்காய் – 5
    2. உருளைக்கிழங்கு (நடுத்தர அளவில்) – 2
    3. பெரிய வெங்காயம் – 2
    4. தக்காளி – 4
    5. உப்பு – தேவைக்கு
    6. கறிவேப்பிலை, மல்லித்தழை —சிறிதளவு
    7. பூண்டு – 2 பல்

    தாளிக்க:

    1. கடுகு – அரை டீஸ்பூன்
    2. சோம்பு – கால் டீஸ்பூன்
    3. பிரிஞ்சி இலை – 1
    4. எண்ணெய் – 3
    5. டேபிள் ஸ்பூன்


    அரைக்க:
    1. தேங்காய்த் துருவல் – 1 கப்
    2. காய்ந்த மிளகாய் – 6 முதல் 8 வரை
    3. தனியா – 1 டேபிள் ஸ்பூன்
    4. சீரகம், சோம்பு – தலா அரை டீஸ்பூன்

    செய்முறை:


    • முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
    • பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள்.
    • கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
    • இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேருங்கள்.
    • பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
    • உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
      இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்றது. 

    0 comments:

    Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

    TOP